314
பையுள்:
இளங்குமரனார் தமிழ்வளம்
―
4
ய
பையுளாவது, வீரன் இறந்ததற்காக அவனுடைய சுற்றத்தார் அழுதலே யன்றி அவர்தம் மனைவியர் தாமே தத்தம் கணவரைக் கட்டிக் கொண்டு அழுததைக் கண்டோர் அடையும் வருத்தமாம்.
(எ.டு)
“கதிர் மூக் காரல் கீழ்ச் சேற் றொளிப்ப" என்னும் புறப்பாடல்
பொருநவாகை:
அறிஞர் ஒரு மன்னனுக்கு ஒப்பின்மை தோன்றும்படி நின்னோடு பிறரை ஒப்பு நோக்கி அவரது ஒவ்வாமை காரணமாக யாரையும் இகழ்வதைத் தவிர்க என அறிவுறுத்துவது பொருந வாகை என்னுந் துறையாம்.
(6.6)
“வெள்ளம் போல்தானை வியந்து விரவாரை எள்ளி உணர்தல் இயல்பன்று- தெள்ளியார் ஆறுமேல் ஆறியபின் அன்றித்தம் கைக்கொள்ளார் நீறுமேற் பூத்த நெருப்பு.
பொருநர் ஆற்றுப்படை:
பொருநன் ஒருவன் மற்றொரு பொருநனை இன்ன வள்ள லிடத்துச் செல்க என ஆற்றுப் படுத்தது பொருநராற்றுப் படை என்னுந் துறையாம்.
(எ.டு)
“தெருவில் அலமரும் தெண்கண் தடாரிப்
பொருவில் பொருந! நீ செல்லின்- செருவில்
அடுந்தடக்கை நோன்றாள் அமர்வெய்யோன் ஈயும்
நெடுந்தடக்கை யானை நிரை.
பொருள் மொழிக்காஞ்சி:
மெய்யுணர்ந்தோர் கண்ட பொருள் இதுவென அதன்
இயல் புணர்த்தியது பொருள் மொழிக்காஞ்சி என்னும் துறையாம்.
(எ.டு)
66
ஆய பெருமை அவிர்சடையோர் ஆய்ந்துணர்ந்த
பாய நெறிமேற் படர்ந்தொடுங்கித்- தீய