தொடரியல்
45
புணர் வாக்கியம் (Double) என்றும், பல கிளவியங்கள் உள்ளதைத் துணர்வாக்கியம் (Multiple) என்றும் அழைக்கலாம்.
கூட்டு வாக்கியங்களின் பொருள் தொடர்பு, பின்வருமாறு
பலவகையில் அமையலாம் :
1. காரண காரியம்
எ-டு : மழை பெய்கிறது; பயிர்விளைகிறது.
2. முன்பின்மை
தோட்டிபோல உழைக்கவேண்டும்; துரைபோலச் சாப்பிட வேண்டும்.
மடியிற் கனமில்லை; வழியிற் பயமில்லை.
எ-டு: மணியடித்தது; கைகாட்டி சாய்ந்தது; வண்டி வந்துவிட்டது. 3.உடனிகழ்ச்சி
எ-டு : இங்கொருவர் வினவுகின்றனர்; அங்கொருவர் வினவு கின்றனர்.
நம்பி வருகின்றான்; நாயும் உடன்வருகின்றது.
சிலர் மாட்டுவண்டியிற் செல்கின்றனர்; சிலர் குதிரை வண்டியிற் செல்கின்றனர். சிலர் இயங்கி (motor)யிற் செல்கின்றனர்; சிலர் இழுவண்டி (rikshaw)யிற் செல் கின்றனர்; சிலர் நடந்து செல்கின்றனர்; வழிநெடுகப் பெருங் கூட்டம்.
ஒட்டக்கூத்தர் இரண்டாம் குலோத்துங்கச் சோழனுக்கு ஆசிரியராகவும் இருந்தார்; அமைச்சராகவும் இருந்தார்.
4. மறுநிலை(Alternative)
எ-டு: அங்கதன் செல்லவேண்டும்; இல்லாவிட்டால் அனுமன் செல்லவேண்டும்.
5.முரணிலை
மாவைத் தின்றால் பணியாரமில்லை; பணியாரத்தைத் தின்றால் மாவில்லை.
சிலநேரம் படிப்பேன்; சிலநேரம் எழுதுவேன்.
எ-டு : ஊரெங்கும் பேர்; வீடு பட்டினி.
அவர் எத்துணையோ சொல்வார்; ஆனால், ஒன்றுகூடச் செய்யமாட்டார்.