தொடரியல்
153
இதில், 'மயிலே மயிலே இறகு போடு' என்பது ஒரு கிளவியம். தையுள்ளிட்ட கிளவியம் ‘மயிலே! மயிலே! இறகு போடு என்றால்'
என்பது.
பயனிலையடைப் பொருள்வகைகள்
பயனிலையடைப்பொருள் பின்வருமாறு பலவகைப்படும்:
1. காலம்
எ-டு : நேற்று (வந்தான்).
மழைநாள்களில் (வளரும்).
2.இடம்
எ-டு : இங்கே (இருக்கிறான்).
ஐந்து கண்டத்திலும் (அதைக் காணலாம்).
3. நோக்கம்
எ-டு : பரிசுபெறும் பொருட்டுப் (படித்தான்).
மகனைப் படிக்கவைத்தற்காக (அவர் இங்கே வந்திருக்கிறார்).
4. காரணம்
எ-டு : சூதாடித் (தோற்றான் பொருளையெல்லாம்). அடிப்படையில்லாததினால் (கட்டடம் விழுந்தது).
5.விளைவு
எ-டு : ஊரெல்லாம் கேட்கும்படி (உரக்கக் கத்தினான்). பிறர் நெஞ்சம் புண்படும்படி (பேசக்கூடாது).
6. நிலைப்பாடு (Condition)
எ-டு : இம் மாதம் 20ஆம் நாளுக்குள் பணம் கட்டிவிட்டால் (வட்டி வேண்டியதில்லை).
7.ஒப்பீடு
இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்காவிட்டால் (தண்டனை ஏற்படும்).
எ-டு : முன்னிலும் சிறப்பாகப் (பேசினார்).
(ஞாலம்) திங்களைவிட ஐம்பத்தைந்து மடங்கு (பெரியது).