150
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
2. வினைமுற்று
எ-டு : கந்தன் வந்தான். - தெரிநிலை இரெட்டியார் நல்லவர். - குறிப்பு
―
வா. ஏவல்
இறைவன் அருள்க! - வியங்கோள்
3. இடைச்சொல்
எ-டு : இது மற்றையது.
4. உரிச்சொல்
ஆண்மையும் முயற்சியும் உள்ளவனுக்கு அரசும் தஞ்சம். தஞ்சம் = எளிமை. 'மற்றையது' 'தஞ்சம்' என்னும் இரண்டும் உண்மையிற் பெயர்ச்சொற்களே.
எ-டு : இக் காய் வம்பு.
வறுமையும் ஒரு சிறுமை.
வம்பு
=
பருவமல்லாக் காலத்தில்
தோன்றுவது.
சிறுமை = நோய்.
5. ஏதேனுமொருசொல்
எ-டு : அவர் சொன்னது 'இயங்கி' (Motor).
அவர் சொன்ன சொல் 'இயங்கி'.
6. தொடர்மொழி
எ-டு : வந்தான் என்பது செயப்படுபொருள் குன்றியவினை. சோழவரசை மீண்டும் நாட்டியவன் முதலாம் இராசராசன்.
7. கிளவியம்
எ-டு: உயிர்நூலார் கருத்து, போரும் ஒரு தேவ ஏற்பாடு என்பது.
பயனிலைப் பொருள்வகைகள்
பயனிலைப் பொருள்கள் பின்வருமாறு எண்வகைப்படும்:
1. சொன்மை குறித்தல்
எ-டு : கம்பர் மகன் பெயர் அம்பிகாபதி.
சேக்கிழார் பொன்னம்பலத்திற் கேட்ட சொல் 'உலகெலாம்'.