218
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
(10) கணவன் மனைவியரின் குலவேறுபாட்டால் பிள்ளை களின் திறமை மிகும்.
(11) நீராவியைவிட மின்சாரம் மிகப் பயன்படுகின்றது.
(12) இன்றைக்குக் காலை ஏழு மணிக்கு மழை தொடங்கிற்று.
குறிப்பு : 'இருக்கின்ற' 'உள்ள' 'இல்லாத' 'இன்றி' முதலிய சொற்கள், பொருள் குன்றிப் பெயரெச்ச வினையெச்ச விகுதிகள் போல வழங்கின், அவற்றை யிறுதியாகக் கொண்ட சொற்றொடர்களைக் கிளவியமாகக் கொள்ளாது தனிச் சொற்களாகவே கொள்ளலாம்.
எ-டு : அறிவுள்ள, அறிவின்றி.
கலப்பு வாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றல்
ஒரு கிளவியத்தை அல்லது பல கிளவியங்களைத் தொடர் மொழியாகவேனும் தனிச்சொல்லாகவேனும் சுருக்குவதனாலும், வாக்கிய அமைப்பை மாற்றுவதனாலும், கலப்பு வாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றலாம்.
கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :
கலப்புவாக்கியம் : நீ என்ன வேலை செய்கிறாய் என்பது
தனிவாக்கியம்
எனக்குத் தெரியாது.
உன்
வேலையைப்பற்றி
தெரியாது.
எனக்குத்
கலப்புவாக்கியம் : இன்னும் இருவாரத்திற்கு இருவருக்கு
தனிவாக்கியம்
மேல் கூடிப் பேசக்கூடாதென்பது, ஊர்காவல் தலைவர் ஆணை.
- ஊர்காவல் தலைவர் ஆணைப்படி, இன்னும் இருவாரத்திற்கு இருவருக்கு மேல் கூடிப் பேசக்கூடாது.
கலப்புவாக்கியம் : சகதீசச் சந்திரபோசு, நிலைத்திணை
தனிவாக்கியம்
(தாவர) யுயிரிகள் எங்ஙனம்
ன்ப
துன்பம் நுகர்கின்றன என்பதை
விளக்கிக்காட்டினார்.
- சகதீசச் சந்திரபோசு, நிலைத்திணை யுயிரிகளின் இன்பதுன்ப நுகர்ச்சியை விளக்கிக்காட்டினார்.
கலப்புவாக்கியம் : பேராசிரியர் இரத்தினசாமியின் சொற்
பொழிவு, ஆங்கிலக் குடியரசு சிறந்த தென்பதைப்பற்றியது.