224
கூட்டுவாக்கியம் :
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
நீ நேர்மையாய் நடந்துகொள்ள வேண் டும்; இல்லாவிட்டால் மானம் கெடும்; வேலையும் போய்விடும்.
கலப்புவாக்கியம் : நீ நேர்மையாய் நடந்துகொள்ளா
கூட்டுவாக்கியம் :
விட்டால், மானங்கெட்டு வேலையும் போய்விடும்.
சில சீர்திருத்தங்கட்குச் சட்டம் இடந்தர வில்லை; ஆகையால் சட்டத்தை மாற்றவேண்டும்.
கலப்புவாக்கியம் : சில சீர்திருத்தங்கட்குச் சட்டம் இடந் தராததினால், அதை மாற்ற வேண்டும்.
பயிற்சி
கீழ்வரும் கூட்டு வாக்கியங்களைக் கலப்பு வாக்கியங்களாக
மாற்றுக:
(1) இன்று எனக்குச் சம்பளம் வரவில்லை; அதனால் ஊருக்குப் போகமுடியவில்லை.
(2) கேள், கிடைக்கும்.
(3) காசுமீரத் தொல்லை நீங்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் அமைதி இராது.
(4) பழையகாலத்தில் படிப்புவசதி குறைவு; இருந்தாலும், பலர் திறமையாய்ப் படித்திருந்தனர்.
(5) குண்டு படும்; குருவி விழும்.
(6) நாளைக்கு ஆள்வரும்; இல்லாவிட்டால் கடிதம் வரும்.
(7)
களவு மிகுகிறது; ஆகையால் காவல் மிகவேண்டும்.
(8) வருமானம் மிகுதிதான்; ஆயினும், சிறிதும் மிஞ்சவில்லை. (9) அவன் கடன் வாங்கிக்கொண்டே போகின்றான்; அதனால், அவன் செல்வம் குறைந்துகொண்டே வருகின்றது.
(10) எத்தனையோ வாய்ப்புகள் வந்தன; ஆயினும், ஒன்றைக் கூடப் பயன்படுத்தவில்லை.
(11) தக்க பயிற்சி யிருக்கவேண்டும்; இருந்தால், இன்றும் கடும்பா (ஆசுகவி) பாடலாம்.
(12) பிறர் குற்றத்தைப் பார்ப்பவர் மிகப் பலர்; பிறர் குணத்தைப் பார்ப்பவர் மிகச் சிலர்.
(13) பெற்றோர் நல்லவரா யிருக்கவேண்டும்; அப்படியானால் பிள்ளைகளும் நல்லவரா யிருப்பர்.