238
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
கல்வியமைச்சர் இங்கு (சேலத்திற்கு) வருவதாகச் சென்னையில் ஒருவர் சொன்னார்.
(5) சில வினைச்சொல் வடிவங்கள்
நேர்கூற்று
செய், செய்யுங்கள்,
செய்க
- நேரல்கூற்று.
நேரல்கூற்று
செய்ய
செய்யும்படி
செய்யவேண்டும்
செய்யேல், செய்யாதீர்,
செய்யற்க
செய்யக்கூடாது.
எ-டு: “ஊர்போய்ச் சேர்ந்தவுடன் கடிதம் எழுது (எழுதுங்கள், எழுதுக,”) என்று சொக்கப்பனார் என்னிடம் சொன்னார்.
- நேர்கூற்று.
ஊர்போய்ச் சேர்ந்தவுடன் என்னைக் கடிதம் எழுதச் சொன்னார் சொக்கப்பனார்.
-
- நேரல்கூற்று
(அல்லது)
ஊர்போய்ச் சேர்ந்தவுடன் நான் கடிதம் எழுதவேண்டு மென்பதாகச் சொன்னார் சொக்கப்பனார்.
—
நேரல்கூற்று
“எந்தக்காரணத்தையிட்டும் வகுப்பிற் பேசேல் (பேசாதீர்),” என்பது ஆசிரியரின் கட்டளை.
-
- நேர்கூற்று
எந்தக் காரணத்தையிட்டும் வகுப்பிற் பேசக்கூடா தென்பதாக ஆசிரியரின் கட்டளை.
—
- நேரல்கூற்று
“கடவுள் மழை அருள்க," என்பது மக்கள் வேண்டுகோள்.
- நேர்கூற்று
கடவுள் மழை யருளவேண்டு மென்பதாக மக்கள் வேண்டு கோள். - நேரல்கூற்று
கவனிப்பு : 'செய்ய', 'செய்யும்படி' என்னும் வாய்பாட்டுச் சொற்கள் வரின், 'என்று' என்னும் இணைப்புச் சொல் வராது. (6) வினைச்சொற் காலம்
நேர்கூற்று
செய்கிறது
நேரல்கூற்று செய்தது
எ-டு : "மருந்து கசப்பாயிருக்கிறது" என்றான் நோயாளி.
மருந்து கசப்பாயிருந்ததாகக் கூறினான் நோயாளி.
- நேரல் கூற்று