250
xii பொருள் மயங்கும் இடம்.
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
எ-டு : குக்கு, கௌடோ செலவிற் கல்வி கற்றார்.
பயனிலை, முற்றுப்பயனிலை எச்சப்பயனிலை என இரு வகைப்படும்.
கண்ணகனார், ஊர்போய்ச் சேர்ந்தவுடன் என்னைக் கடிதம் எழுதச் சொன்னார்.
மறைமலையடிகள், மரணத்தின்பின் மனிதன் நிலையைப் பற்றி வரைந்துள்ளனர்.
xiii. பொருள் விளக்க இடைப்பிறவைப்பு :
எ-டு : மாரியப்பன், அதாவது காவேரி மகன், மணஞ்செய்த மறு நாளே இறந்துபோனான்.
xiv. ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல்.
எ-டு : ஒருவன் பிறரிடத்தில், முக்கியமாய் எளியவரிடத்தில், இன்சொல் வழங்கவேண்டும்.
XV. வாக்கிய வுறுப்பாய் வரும் மேற்கோள். எ-டு : “அன்பே சிவம்”, என்றார் திருமூலர்.
Xvi. பகுதி குறிக்கப்படும் நூற்பெயர்.
எ-டு : தொல்காப்பியம், 28
xvii. நூற்பகுதி குறித்தல்.
எ-டு : ஈடு, 1, 4,2,168
xviii. தேதி.
எ-டு : 8, ஆனி, உருத்திரோற்காரி, 12, மார்ச்சு, 1942.
xix. சொற்பொருள்கள் கூறல்.
எ-டு : திரு - செல்வம், அழகு, தூய்மை, திருமகள்.
2. அரைப்புள்ளி (Semicolon) வருமிடங்கள்
1. புணர்வாக்கியம்.
கூட்டுக்கிளவியப் புணர்வாக்கியம்.
எ-டு : இயந்திரம் உழவுத்தொழில் செய்கிறது; மாவரைக்கின்றது; இடம் பெயர்விக்கின்றது; அச்சடிக்கின்றது; பொருள் ஆக்குகின்றது; போர் செய்கின்றது; இன்னும் எத்தனையோ வினைகளைச் செய்கின்றது.