மறைமலையடிகள் பல்துறையாற்றற்
பதிகம்
1. பேராசிரியர்
நூலும் நுவல்வும் நுணங்குரையும் நன்பதிப்பும் சாலும் இதமும் சமமாக - மேலுயர்வுப் பேரா சிரியர் பெரும்பேர் மறைமலையார்
நேரார் உளரிந் நிலத்து.
2. பெரும் புலவர்
தொல்காப் பியமுதலாந் தொன்னூலும் பின்னூலும் பல்காற் றனிப்பாடல் பட்டயமும் - ஒல்காப் பெரும் புலவர் உள்ளும் பெரியார் தனியே
அரும்பொன் மறைமலை யார்.
3.பாவலர்
உரைநடையும் பாவும் ஒருங்கே சிறந்த
விரைவுடையார் சில்லோர் வியன்பார் - மறைகலையார் செம்மைப் பொருளணிசேர் செய்யுள் திருவொற்றி
மும்மணிக் கோவை முறை.
4. ஆராய்ச்சியாளர்
நுண்மதி கல்வி நுடங்காத் தறுகண்மை
நண்ணிலை மன்னலம் நல்வாய்மை - திண்முயற்சி சாலுமா ராய்ச்சிச் சதுரர் மறைமலையார்
பாலையும் முல்லையும் பார்.
5. மும்மொழிப் புலவர்
மொழியும் இலக்கியமும் முத்தமி ழும்பேச்
சழியும் வடமாங் கிலமும் - கழிபுலமை
கொண்ட மறைமலையார் கோன்மை தமிழ்நிலமுன் கண்டதும் கேட்டதும் இல்.