198
இளங்குமரனார் தமிழ்வளம் - 25
கமலங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன.
வா.கு. 248 கு.248
யான் பொய்கை நடுவண் நின்றேன்; மெல்ல மெல்ல
நீந்தியே வந்தேன். மாணாக்கர் கூட்டம் வீட்டுவரை
தொடர்ந்தது.
(கமலங்கள் - மாணவர்கள்;கூட்டம் - பொய்கை)
எச்ச இணைப்பு நடை
பழந்தமிழன் உலகம் உலகம் என்றே நினைத்து, என்றே பேசி, என்றே செயலாற்றினான். (என்று -எச்சம்).
எதுகை நடை
அந்நாள் எந்நாள்?
ம.வா.கா.அ:14
வாட்டம் தீர்த்து மீண்டும் தோட்டம் நோக்கினேன்.
வா.கு:708
பாலர் சொற்பொழிவு எனக்கு விற்பொழிவாகவும்
தோன்றியது.
வா.கு. 252
துட்டுவந்து அவர்பெட்டி நிரம்புகிறதேயன்றித் திட்டு அவரை ஒன்றும் செய்யவில்லை.வா.
கு:358
எதுகைவழி, முரண்நடை
ஒலிபெருக்கி பாலரைக் கண்டிருப்பின் அஃது ஒலி
சுருக்கியாய் ஒடுங்கும்.
வா.கு: 252
கலைநாடு கொலை நாடாகியது; சைநா
நாடு வசை
நாடாகியது.
த.தெ.426
—
(வழி மீண்டும் வருதல்; முரண் எதிரிடை).
-