இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46
இளங்குமரனார் தமிழ்வளம் - 33
பாட்டி மட்டும் கொஞ்சம்
எழுதப் படித்தி ருந்தால், பாட்டி ஔவை அவர்தாம்
பாடிப் போற்றும் உலகே!
அப்பா எங்கள் அப்பா,
74. அப்பா
அருமை யான அப்பா;
ஒப்பில் லாத அப்பா;
ஒழுங்கு மிக்க அப்பா.
கடமை தவறா அப்பா;
காலம் தவறா அப்பா;
மடமை அறியா அப்பா;
மதிப்பிற் சிறந்த அப்பா.
கண்ணைக் காத்தல் போலக்
கருதிக் குடும்பம் காப்பார்;
எண்ணி எழுதிக் கணக்காய்,
என்றும் செலவு செய்வார்.
கல்வி தந்த அப்பா;
கண்ணைத் திறந்த அப்பா;
நல்ல வாழ்வு தந்த
நன்றிக் குரிய அப்பா!
75. அம்மா
எங்கள் அம்மா போல
எவர்க்கு வாய்த்தார் அம்மா?
தங்க மான அம்மா;
தவத்தால் பெற்ற அம்மா!
பொங்கல் மனையைப் போலப்
பொலியும் என்றும் மனையே!
எங்க ளுக்குக் கவலை,