வானவில்
63
"அம்மா, நீங்களும் தாய்தானே! அவர்களைத் 'தாய்' என்றுகூட ஊர் மதியாமல் போனாலும் போகட்டும்; மிதியாமல் ஆவது இருக்கலாம் அல்லவா!”
சாமியாக இருக்க மாட்டேன்
"நீ சாமி; நான் பூசாரி."
"சரி.
"சாமிக்கு என்னென்ன பிடிக்கும்?"
"அவல் கடலை சுண்டல் முறுக்கு பழம் பால் எல்லாம்
பிடிக்கும்."
"இவ்வளவுக்கும் காசு
(6
""
'என்னிடம் இருக்கிறது.”
"எடு வாங்கலாம்."
"நீ சாமியாக உட்கார்; கண்ணை மூடு; அப்படியே இரு; பார்க்கக் கூடாது; பேசக் கூடாது;”
"அப்படியே இருக்கிறேன் நீ படை.
நீ பாராதே! பேசாதே!"
"எவ்வளவு நேரம் பாராமல் பேசாமல் இருப்பது?"
சாமியாக இருக்குமட்டும் பாராதே பேசாதே.
"சாமிக்குப் படைத்தவை எல்லாம் காணவில்லையே
எங்கே?'
"தின்று விட்டேன்."
"சாமிக்கு இல்லையா?
"சாமிக்குப் படைத்தால் போதும்; அது தின்னாது.
"ஐயையோ! நான் சாமியாக
பூசாரியாகத்தான் இருப்பேன்."
ருக்க மாட்டேன்;