வானவில்
தந்தது
69
"அம்மா, உங்களுக்குக் கொஞ்சமாவது நன்றி இருக்கிறதா? ஒரு நல்ல சொல்லாவது உங்களிடம் உண்டா?"
நன்றி எனக்கா இல்லை? நல்ல சொல் நான் சொல்லவா இல்லை?'
66
"ஆம்! ஆம்! நான் உணவு தருகிறேன்; உடை தருகிறேன்; வேண்டும் உதவிகள் செய்கிறேன்; மருத்துவம் பார்க்கிறேன்;"
இவ்வளவு தந்தும்...
"அடே அடே! என்னென்னவோ எனக்குத் தந்ததாகச் சொல்கிறாயே! அந்தப் பட்டியல் எல்லாம் எனக்கு வேண்டியது இல்லை! உன்னைத் தந்தவளே நான் இல்லையாடா? நான் தராமல் எப்படியடா நீ இவற்றைத் தந்தாய்?'
மக்களே போல்வர்
பொய்யன்வாய், புழுத்துக் கிடக்கும்;
திருடன் வாய், தீய்ந்து போயிருக்கும்;
வஞ்சன் நெஞ்சு, கரிந்திருக்கும்;
பொறாமையன் கண், இடுங்கிக் கிடக்கும்;
ஒழுக்கமற்றவன் நெற்றியில், கட்டியிருக்கும்;
கையூட்டான் கலப்படத்தான் கைகள், நான்காய், விரல்கள், ஆறாய் ஏழாய் இருக்கும்
- என்றால் எளிதாய் இவரெனக் கண்டு கொள்ளலாம்.
அவ்வாறு எளிதாகக் காண முடியாமையால்தான், "மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டதில்"
என்றார் திருவள்ளுவர்.