106
இளங்குமரனார் தமிழ்வளம் - 33
தேடி இரண்டும் விரைந்தன;
கூடும் எழுந்தது; குடியும் புகுந்தன;
தென்றல் காற்றில் மெல்லென அசைந்தது கூடு: தேனிசை பாடி ஊஞ்சல் ஆடின இரண்டும்;
"புளிய மரத்தில் தென்னை போலப்
பொலிவும் அசைவும் உண்டோ?" என்றது பெண்.
'அப்படியா?' என்று அமைந்தது ஆண்;
காலம் கடந்து கடிதில் பறந்தது.
புதிது புதிதாய்த் தென்னையில் குருத்துக் கிளர்ந்தன;
பழைய கீற்றுகள் பழுத்து முதிர்ந்தன;
முற்றிக் காய்ந்து வற்றிப் போயது அடியில் இருந்தகீற்று;
அந்தக் கீற்றும் ஆடிக் காற்றில்
அடியும் முடியும் ஆடி அலறி வீழ்ந்தது;
கூடு பிழைக்குமோ? குடும்பம் தழைக்குமோ? நாணி ஒடுங்கி நலிவு கூர்ந்தது பெண். பிழையை மறந்து பெரிய அன்பைப்
பேணிப்பொழிந்தது ஆண்!
புதிய அறிவு! புதிய வாழ்வு!
புதிய பாட்டுப் பூரிப்போ டெழுந்தது!
கூடு பிரிந்தால் என்ன! - எங்கள்
குடும்பம் பிரியவில்லை.
குடிசை அழிந்தால் என்ன? - எங்கள் குடும்பம் அழியவில்லை!
ஒத்துப் போகத்தெரிந்தோம் - நாங்கள் ஒழித்து போக வில்லை.
முத்துப்போலத் தெரிந்தோம் - அதனை முழுதும் ஏற்றுக் கொண்டோம்!”