பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்
199
தீந்தமிழ்
பண்தமிழ்
தூநெறித்தமிழ்
பழகுதமிழ்
தெள்ளு செந்தமிழ்
பூந்தமிழ்
தெளிதமிழ்
பைந்தமிழ்
தென்றமிழ்
மயத்தமிழ்
தென்மொழி
மயன்தமிழ்
ஐந்தமிழ்
மாத்தமிழ்
ஐந்தியல் தமிழ்
முத்தமிழ்
ஐந்தியற் செந்தமிழ்
முதன்மொழி
ஒண்டமிழ்
முழுத்தமிழ்
ஒலித்தமிழ்
விண்டமிழ்
நவையறுஞ் சிற்ப நற்றமிழ்
விண்ணொளித்தமிழ்
நற்றமிழ்
நன்மொழி
வெளித்தமிழ்
இவ்வாட்சி, வழக்கம்போல் பல்கால் பயின்று வருவனவே என்பதைக் குறிக்க வேண்டுவதில்லையாம்!
அரங்கம் அளக்குங் கோலின் அளவு இருபத்து நால்விரலெனக் கூறுவார் இளங்கோவடிகளார் (சிலம்பு 3 : 100). அதனை விளக்கும் அடியார்க்கு நல்லார், "அணு எட்டுக் கொண்டது தேர்த்துகள்; தேர்த்துகள் எட்டுக்கொண்டது இம்மி; இம்மி எட்டுக் கொண்டது எள்ளு; எள்ளு எட்டுக் கொண்டது நெல்லு; நெல்லு எட்டுக் கொண்டது பெருவிரல் எனக் கொள்க" என்பார். இச் செய்தி ஐந்திறத்தில்,
"எட்டணு தேர்த்துகள் நெறியென் றாகி எட்டு தேர்த்துகள் இம்மி நிலையாய் எட்டுறும் இம்மி எள்ளென் றாகி எட்டெள் ளொருநெல் அளவை குறித்தே எட்டுறும் நெல்கை விரலெனக் கண்டே அளவை ஆக்கம் அறிதல் கலையாய்”
என்று வருகின்றது (676).