இசையரங்கு இன்னிசைக் கோவை
32. பறம்புக்குடி
'குரும்பைநிகர் மென்முலையாள்' என்ற மெட்டு
1
உலகத்தமிழ்க் கழகக்கிளை யுற்றபல மாவட்டங்கள்
முலமுலெனக் கிளைகள் மொய்ந்த முதன்மையது முகவையாகும் பலகிளையும் பாங்கா மேனும் படைப்புமுறைத் தலைமை சொல்லின் தலைவன்தமிழ்க் குடிமகனே தங்கியதாம் பறம்புக்குடி.
2
கழக முதலாட்டைச் சீர்நாள் காணரிய வள்ளுவர்தம் பொழுதுகழிந் தீராயிரம் புகலுமிந்த ஆண்டயர்வும் பழகுபரி மேலழகர் பளகறுக்கும் உரைவிழாவும் விழுமியவாய் நடக்குமாற்றால் விஞ்சியதாம் பறம்புக்குடி.
33. திரு.இரா. முத்துக்கிருட்டிணன்
'மண்டலம் புகழும் மாணிக்கமாய் விளங்கம்' என்ற மெட்டு
1
மெத்தப் பெருந்தகை யொத்துப் பிறந்தவன் முத்துக் கிருட்டிணன் அன்றோ
இற்றைக் கிருந்தமிழ்ப் பற்றிற் சிறந்தவோர் கொற்றத் திருமகன்
63
ஒன்றோ (மெத்தப்)
2
கோப்பெருஞ் சோழனும் மாப்பிசி ராந்தையும் கோப்புமாறிப்
பிறந்தன்றே
யாப்புற வேயின்றிக் கேட்பினா லேயொன்றிக் காப்பவன்
3
முன்வந்தானின்றே (மெத்தப்)
தென்னன் தமிழ்பேணும் மன்னன் ஒருவனும் சென்னையிலே
யின்றே யில்லை
தன்னந் தனிவள்ளல் அன்ன இவனின்றேல் என்னென்
னவோபெருந் தொல்லை (மெத்தப்)