44
தென்சொற் கட்டுரைகள்
பலர் ‘ஆவீறையும்' என்பதன் மறுதலையை யுணராது ஐகாரவீற்றுத் தமிழ்ச்சொற்களை யெல்லாம் ‘குர்ரம்' வாய்பாட்டில் ஆகாரவீற்று வடசொற் றிரிபாகக் கொள்ளுவர்.
தென்சொற்களை வடசொற்களாக்கும் முறைகள் பலவுள. அவற்றுள் ப்ரதிமா என்னுஞ் சொல்லிற் கொண்டன மூன்று.
அவையாவன:
1. ப - ப்ர
2. டி - தி (ட தி (ட - த)
3. மை
―
மா
மொழிமுதன் மெய்யொடு ரகரம் சேர்த்த வளவானே தூய தென் சொற்களையும் வடசொல்லென மயங்குகின்றனர் தமிழறிஞர். இனி வேறுபல மாறுதல் கூடின் அவர் மயங்குதலைச் சொல்லவும் வேண்டுமோ?
“பிறக்கு-பிருதக்கென்னும் வடமொழிச் சிதைவென்க என்றார் அடியார்க்குநல்லார் (சிலப். ப. 162)
பின் - பின்பு, பின்று, பின் - பிறந்து, பிற, பிறகு, பிறக்கு.
இத்துணைத் தெளிவாகப் பிறக்கு என்பதன் மூலமும் பிறவடிவும் தமிழிலிருந்தும் அடியார்க்குநல்லார் அதனை வடசொல்லெனப் பிறழ வுணர்ந்தமைக்கு ஊழ்வினை யல்லது வேறொரு காரணங் கண்டிலம். 'பிறக்கொழிய’ என்பதற்குப் 'பின்னிட்டொழிய' என்று அரும்பதவுரைகள் உரைத்ததையும் அவர் உற்றுநோக்கிலர்.
எ
இனி, படி என்னும் சொல் ஒலித்தற் பொருளில் படித்தலையும் வாசித்தலையும் குறிக்கும்.
படி - to read, to learn, to sing, to memorise.
+
Skt. பட். படி +
அம் = பாடம்.
இதுகாறுங் கூறியவற்றால் படிமை என்பது தென்சொல்லே யென்றும், ப்ரதிமா என்பது அதன் திரிபே என்றும், இருமொழிக்கும் பொதுச்சொற்களை வடிவுபற்றி மயங்காது பகுதிப் பொருளறிந்து இன்ன மொழியெனத் துணிதல் வேண்டுமென்றும் அறிந்து கடைப்பிடிக்க.
“செந்தமிழ்ச் செல்வி" துலை 1936