84
மழை - (மழை) - வழை=புதுமை.
"பாகரிறை வழைமது நுகர்பு” (பரிபா, 11 : 66.)
தென்சொற் கட்டுரைகள்
ம வ, மெய்யினத் திரிபு. ஒ.நோ: மிஞ்சு-விஞ்சு.
மழ மழு - மழுக்கை வழுக்கை. வழுக்கைப்பயல் = சிறு பயல். வழுக்கை வழுக்கட்டை = சிறு பிள்ளை. –
வழை – வழைச்சு வழைச்சு = புதுமை.
“சாடியின் வழைச்சற விளைந்த” (பெரும்பா. 280)
புதுமை சிறுமை அழகு வீரம் முதலியன இளமையொடு தொடர் புடைய கருத்துகள். அதனால், இளமையைக் குறிக்கும் சொற்கள் இப் பொருள்களை உணர்த்தின.
—
மழலை மதலை = குழந்தை மொழி, குழந்தை, மகன்.
=
மதலைக்கிளி இளங்கிளி.
―
மழ - (மத) - மட மடம் = இளமை, மென்மை, அழகு, அறியாமை. மடமை = 1. மென்மை. “தெளிநடை மடப்பிணை” (புறம். 23)
2. அறியாமை
அறிவு பெரும்பாலும் ஆண்டுப் பெருக்கத்தால் அடையப் பெறுவதால், இளமையில் அறியாமை மிகுந்திருப்பது இயல்பு. இதனால், இளமைச்சொல் அறியாமையை உணர்த்திற்று.
மள் - (மண்) - மணி = சிறியது.
மணிக்கயிறு, மணிக்காடை, மணிக்குடல், மணிக்கை, மணிக்கோரை, மணிச்சம்பா, மணிச்சுறா, மணித்தக்காளி, மணித்துத்தி, மணிப்பயல், மணிப்புன்கு, மணிப்புறா, மணிப்பொச்சம், மணியீரல் முதலிய வழக்குகளை நோக்குக.
மண் - மாண் -1, சிறுவன், இளைஞன், மணவாதான் (பிரமசாரி).
“மாணாகி வைய மளந்ததுவும்” (திவ். பெரியதிரு மொழி; 8:10 : 8,)
2. குறள், குறளன்.
"குறுமா ணுருவன் தற்குறியாக் கொண்டாடும்” (தேவாரம் 164 : 5)
மாண் -மாணி = 1. மணவாதான், மாணவன்
“கருமாணி யாயிரந்த கள்வனே” (திவ்.இயற்பா. 2:61) 2. குறள் வடிவம்
(திவ், பெரியாழ்வார் திருமொழி, 1 : 4 : 1 ஸ்வாபதேச வியாக்கியானம்).
3. சிற்றுறுப்பு.