பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25

கிறவர்கள், சூழ்ந்துள்ளவர்கள் எல்லோருக்கும் தீராத தொல்லையாய், பெரும் சுமையாய் மாறிவிடுகிறான். தனக்குத் தானே சுமையாகி செத்துத் தொலைஞ்சாலும் நல்லாயிருக்குமே என்று அவனும், அவனைச் சேர்ந்தவர்களும் எண்ணும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

பெரும்பாலருக்கு வாழ்க்கையிலேயே பற்று இல்லாத போது - வாழவேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்க சூழ்நிலை உதவாத போது - வாழப்பிறந்தோம். வாழ்வோம் என்ற தெம்பை உண்டாக்க இயலாத வாழ்வு முறை நீடிக்கும் போது மனித சமுதாயம் எப்படி உருப்படமுடியும்?

எங்கும் வியாதியும், திருப்தியின்மையும், சோம்பல் உபாசனையும் கோர தாண்டவமிடுகின்றன.கொடிய நோய்கள் மனிதரை காணச் சகியாக் கோரங்களாக்கிவிடுகின்றன. நாகரிகம், அறிவு, வளர்ச்சி. ஆராய்ச்சி எல்லாம் உயர்நிலையிலே உள்ளதாகச் சொல்லப்படுகின்ற இன்று கூட, மனிதர் ஆபாச, அநாகரிக மிருங்கள் போன்று, அருவருப்புதரும் பிண்டங்களாகி விடுகிறார்கள்.கொடிய வியாதிகளின் கையிலே.

அவற்றை ஒழிக்கவோ, மறைத்து ஒயிலாகத் திரிந்து மயக்கவோ வகையற்றவர்கள் மனிதப்பிறவிகளின் தன்மையை பழிப்புக் காட்டும் கோரணிகளாக, கடைப்பிணங்களாக, அலைகின்றார்கள். அவர்கள் சகலவிதப் பசிகளையும் அரிப்புகளையும் தீர்த்துக் கொள்ள, கண்டபடி திரியும்போது, இவர்களை இப்படி நடமாடவிடுவதே தப்பு; இவர்களைக் குணப்படுத்த வேண்டும்; குணப்படுத்த முடியாவிட்டால்,