பக்கம்:அன்பு மாலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பு மாலை

37

வாதம் இடுவார், படிப்பறி வார், பல மாண்பறிவார்,
கீதம் அறிவார், கிளர்கின்ற கானம் கெழுமவரும்
வேதம் அறிவார் எனினுமக் காலனை வெல்லுவரோ?
நாதனாம் ராம சுரத்குமார் பால்வம்மின்; நன்மையுண்டே. 84

கானம் கெழும - சுவரம் பொருந்த,

அகண்ட முறுசச்சி தானந்தம்
அவ்யயம் ஆன்மச்சுடர்
திகந்தம் பரவிச் செறிபொருள்
என்றே தினமுரைப்பீர்
சுகந்தரு மோ?செய்கை துன்னிட
வேண்டும்; துணிந்துசென்றே
இகந்தனில் ராம சுரத்குமார்
தன்பால் இணையுமினே! 85

அகண்டம் - பிளவில்லாத தன்மை.
திகந்தம் - திசைகளின் முடிவு வரையில்.

காலம் கடந்த தனிப்பொருள், எல்லாக் கதிகளையும்
ஞாலம் தனையும் கடந்த பெரும்பொருள், ஞானமென்னும்
கோலம் கொளும்பொருள், ராம சுரத்குமார் கோலமொடு
சீலம் பல கொண்டு நிற்பதைக் கண்டுநீர் சேருமினே! 86

கதி - மார்க்கம்.

ஐய மறுமின், அடர்புலன்
ஐந்தின் அவலமெல்லாம்
நைய அருளைப் பெறுமின் என்
றேசொல்லி நாளுமன்பர்
செய்யும் வணக்கத்தைக் கொண்டுளான்
ஞானமெய்ச் சித்தர்புகழ்
மெய்யனாம் ராம சுரத்குமார்
என்கின்ற மெய்ம்முனியே 87

அவலம் - துன்பம், நைய - அழிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/43&oldid=1303379" இலிருந்து மீள்விக்கப்பட்டது