உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 அறிவியல் தமிழ்

      நீல மேனி ஐயோ!
          நிறைகொண்ட(து)என் நெஞ்சினையே!',12
   (பாலகன்-குழந்தை; ஞாலம்-உலகம்; கோலம்-அழகிய; ஆரம்-மாலை; தாமம்-மாலை; எழில்-அழகு)             என்பது ஆழ்வாரின் அநுபவம். இந்தப் பாசுரத்தில், எல்லா அழகுகளையும் சேர்த்துக் கொண்டு, திருமேனி என்ற நீலச்சோதி ஆழ்வாரைப் படுத்திய பாடு வெளிப்படுகின்றது. நீலமேனியின் மாசற்ற அழகு, கடலாக வெள்ளமிட்டுவர, அதனை நெஞ்சால் அநுபவிக்கப் பாரிக்கின்றார்; அந்த அழகினை 'முடி வில்லதோர் எழில்’ என்று பாடிப் பரவசமாகின்றார். ஆனால், அழகு வெள்ளத்தில் சுருட்டிய பேரலை ஒன்று இவர் நெஞ்சை இழுத்துக் கொள்ள, 'ஐயோ, என் நெஞ்சையும் இழுத்துக்கொண்டதே!’ என்று ஏங்குகின்றார்.  "ஐயோ-பச்சைச் சட்டையுடுத்தித் தனக்குள்ளதை யடையக் காட்டி எனக்குள்ளதை அடையக் கொண்டானே!" என்பர் பெரியவச்சான் பிள்ளை. "நான் எல்லாவற்றையும் நின்று நின்று அநுபவிக்க வேணுமென்றிருக்க, அது பவபரிகரமான என் நெஞ்சைத் தன் பக்சலிலே இழுத்துக்கொள்வதே! ஐயோ! என்கிறார்" என்பர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். இந்த அநுபவத்தின் எதிரொலிதான்,                  
       "ஐயோ! இவன் வடிவென்பதோர்
           அழியா அழகுடையான்"23

என்று கம்பன் வாக்கால் இராமபிரானின் அழகாக வடிவங் கொள்ளுகின்றது.

   இங்ங்னம் இறைவனின் எழிலை அகக் கண்ணாலும், புறக்கண்ணாலும் அநுபவித்த ஆழ்வார்,
     12. அமலனாதி-9                                  
     13. கம்ப, அயோத், கங்கைப் படலம்-1