பக்கம்:இரு விலங்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சால நன்று

51


உண்டிருந்தால் உயிர் போயிருக்கும். ஆனால் அதனைக் காணாமல் வருந்திப் பிறகு சினம் ஆறி, ஆண்டவனே தன்னைக் காப்பாற்றினான் என்று ஆறுதல் பெற்றாள்.

 இந்தக் களவினால் நன்மையே விளைந்தது. திருவள் ளுவர் வாய்மையைப் பற்றிச் சொல்லும்போது,
   "பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின"'

என்று சொல்கிறார். குற்றமற்ற நன்மையை விளைவித் தால் பொய்யையும் மெய்யாகவே எண்ணவேண்டும் என்பது அந்தக்குறளால்தெரியவருகிறது. அதுபோலவே களவும் நன்மை பயப்பதானால் ஏற்றுக் கொள்வதற் குரியது என்று சொல்லலாம் அல்லவா?

 இறைவனையே கள்வன் என்று சொல்வார்கள். அன்பர்களின் அறியாமையை அவர்கள் அறியாமலே களவு கொள்ளும் கருணை உடையவன் அவன். குழந்தை யின் கையில் கத்தியிருக்கிறது. அது தன் கையையோ காலேயோ வெட்டிக் கொள்ளுமே என்று அஞ்சுகிறாள் தாய். நல்ல வேளையாக அது சோர்ந்து போய்த் தூங்கத் தொடங்குகிறது. அந்தச் சமயத்தில் அந்தக் குழந்தை அறியாமல் அன்னை அதை எடுத்துக் கொள்கிறாள். அது ஒரு வகையில் களவுதான். ஆனால் அந்தக் களவினால் குழந்தைக்கு நன்மையே விளைகிறது. இறைவன் அந்த வகையில்தான் நலம் செய்கிறான். 

ஶ் ரீ ருத்திரம் இறைவனைக் கள்வனென்றே சொல் கிறது; சாதாரணக் கள்வன் அன்று, கள்வர் தலைவ்ன் என்று சொல்கிறது.

         "தஸ்கராளும் பதயே நமோநம"

என்பது ருத்திரம். திருஞான சம்பந்தப் பெருமான் சிவ பிரானை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/73&oldid=1402476" இலிருந்து மீள்விக்கப்பட்டது