அறிவுக் கனிகள்/நம்பிக்கை

விக்கிமூலம் இலிருந்து

29. நம்பிக்கை


502. ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உற்சாகம் அளிப்பதாகும்.

ஸ்காட்

503.மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.

மார்ட்டின் பூபெர்
504.நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது.
ஷேக்ஸ்பியர்

505.காருக்குப்பின் வேனில், இரவுக்குப் பின் பகல்; புயலுக்குப் பின் அமைதி.

அக்கம்பிஸ்

506.நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி.

கெளலி

507.இரவில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அநேக சமயங்களில் காலையில் எல்லாம் சரிப்பட்டுப்போகும்.

ஆவ்பரி
508.நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும்.
மூர்

509.எல்லாமொழிகளிலும் அதிக துக்ககரமானவை—“அப்படிச் செய்திருந்தால்”— என்னும் மொழிகளே.

விட்டியர்

510.ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை

புல்வெர் லிட்டன்

511.நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு.

பிளினி

512.நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்படவேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன்.

போப்

513.நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார்.

காஸ்காயின்

514.நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும்.

மூர்


515.நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு.

கெளலி

516.உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கும்.

கே

517.சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும்.

வெரிஜில்