ஆசிரியர்:வல்லிக்கண்ணன்

விக்கிமூலம் இலிருந்து
வல்லிக்கண்ணன்
(1920–2006)
வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 10, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய “வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

படைப்புகள்[தொகு]

  1. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக சிறந்த கதைகள் பதிமூன்று
  2. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக நல்ல மனைவியை அடைவது எப்படி
  3. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக அவள் ஒரு எக்ஸ்ட்ரா ("கோரநாதன்" என்னும் புனைப்பெயரில் இந்நூலை வல்லிக்கண்ணன் எழுதினார்)
  4. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக அத்தை மகள்
  5. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக ஆண் சிங்கம்
  6. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக தமிழ் வளர்த்த ஞானியாரடிகள் (தொகுப்பு நூல்)
  7. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக ஊர்வலம் போன பெரியமனுஷி
  8. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக விஜயலஷ்மி பண்டிட்
  9. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக இருட்டு ராஜா
  10. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக டால்ஸ்டாய் கதைகள், 1956
  11. ePubஆக பதிவிறக்குக - pdfஆக பதிவிறக்குக - mobi (kindle) ஆக பதிவிறக்குக தமிழில் சிறு பத்திரிகைகள், 2004


Public domain
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TamilNadu Logo
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:வல்லிக்கண்ணன்&oldid=1537444" இலிருந்து மீள்விக்கப்பட்டது