ஆண் சிங்கம்

விக்கிமூலம் இலிருந்து


சிறுகதைகள்



ஆண் சிங்கம்



வல்லிக்கண்ணன்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

ஆண் சிங்கம்





சிறுகதைகள்

ஆசிரியரின் பிற நூல்கள்

சிறுகதைகள்

கல்யாணி

நாட்டியக்காரி

வல்லிக்கண்ணன் கதைகள்


நாடகம்

விடியுமா?


கட்டுரை

உவமை நயம்


வரலாறு

நம் நேரு

விஜயலக்ஷ்மி பண்டிட்


நாவல்

சகுந்தலா

விடிவெள்ளி

அன்னக்கிளி


மொழிபெயர்ப்பு நூல்கள்

கடலில் நடந்தது (கார்க்கி கதைகள்)

சின்னஞ்சிறு பெண்

டால்ஸ்டாய் கதைகள்

கார்க்கி கட்டுரைகள்

சிறுகதைகள்




ஆண் சிங்கம்



வல்லிக்கண்ணன்



எழுத்து பிரசுரம்

சென்னை-6

எழுத்து பிரசுரம்

முதல் பதிப்பு: ஜூன் 1964



Published by:

Ezhutthu Prachuram

19-A, Pilliar koil Street

Triplicane, Madras - 5



(C)

Valiikkannan



விலை ரூ. 4-00



அச்சிட்டது :

சரஸ்வதி பிரஸ், சென்னை-5

வல்லிக்கண்ணன் (ரா. சு. கிருஷ்ணஸ்வாமி) 12-11-1920-ல் பிறந்தார். திருநெல்வேலி ஜில் லாவில் உள்ள ராஜவல்லிபுரம் அவரது சொந்த ஊர். வாழ்க்கைப் பாதையில்-முதலில் சர்க்கார் ஆபீஸ் குமாஸ்தாவாக அடி எடுத்து வைத்த போதி லும், எழுத்து வெறி பற்றி நான்கு வருஷ சேவையை உதறிவிட்டு, எழுத்தாளனாக முன் வந்தார். 1940 முதல் அவரது எழுத்துக்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. 1943 முதல் சில வருஷ காலம் பத்திரிகை அலுவலகங் களில் பணிபுரிந்தார். ‘திருமகள்’ (மாசிகை), ‘சினிமா உலகம்’ (மாதம் இருமுறை) 'நவசக்தி' (மாசிகை) ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரிய ராக அனுபவம் பெற்று, பின்னர் ‘கிராம ஊழியன்’ (மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறை) ஆசிரிய ரானார். 'ஊழியன்’ நின்றதும், 1947-ல் அவர் சென்னை வந்து சேர்ந்தார். ‘ஹனுமான்’ வாரப் பத்திரிகையில் இரண்டு வருஷங்கள் (1949-51) துணை ஆசிரியராகக் கடமையாற்றினார். அதன் பிறகு, சுயேச்சை எழுத்தாளராகவே சென்னையில் வசிக்கிறார். வனா.கனா ஒரு பிரமச்சாரி.


சில வார்த்தைகள்

நான் எழுத்தாளன் ஆகி இருபத்தைந்து வருஷங்கள் முடியப் போகின்றன. நடப்பது 'வெள்ளி விழா வருஷம்'. இதன் நிறைவை எப்படிக் கொண்டாடுவது என்று நான் சுவையான பல கனவுகள் கண்டது உண்டு. 'எனது கதைத் தொகுதி ஒன்றை உயர்ந்த பதிப்பாக வெளியிடுவது' என்பது அவற்றில் இடம் பெற்றதில்லை. ஆனால், நண்பர் செல்லப்பா எனது கதைகளே 'எழுத்து பிரசுரம்’ ஆக வெளியிட்டு என்னுடைய வெள்ளி விழா? அனுபவத்துக்குச் சிறப்பு தருகிறார் மிகவும் மகிழ்ச் சிகரமான இந்த ஏற்பாட்டுக்காக நான் ஆரம்பத்திலேயே அவருக்கு என் நன்றியை அறிவித்தாக வேண்டியது அவசியம்.

'ஆண் சிங்கம்' எனது நான்காவது கதைத் தொகுதி. முதல் தொகுதி 'கல்யாணி' முதலிய கதைகள் 1945-ல் பிரசுரமாயிற்று. அடுத்து, 1946-ல் 'நாட்டியக்காரி' வெளிவந்தது. 1954-ல் 'வல்லிக்கண்ணன் கதைகள்’ என்ற பெயரில் ஒரு தொகுப்பு பிரசுரிக்கப்பட்டது. இவை எல்லாமே, புத்தகம் வெளியிடுவதைத் தொழிலாகக் கொள்ளாத வெவ்வேறு நண்பர்களால் தான் பிரசுரிக்கப் பட்டன. இப்போதும் நண்பர் செல்லப்பா என்னிடம் கொண்ட அன்பு காரணமாக எனது கதைகளே ஒரு தொகுதியாக வெளியிட முன் வந்திருக்கிறார். 'எழுத்து பிரசுரம்’ எனக்கு அளிக்கிற கெளரவம் ஆகவே இதை நான் கருதுகிறேன்.

எழுத்து, எண்ணம், சொற்கள் ஆகியவற்றை வைத்து விளையாடியதின் விளவுகள் என் கதைகள், இப்படித்தான் எழுதவேண்டும், இன்ன விஷயங்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று நான் வரம்பு வகுத்துக் கொள்ளவில்லை. பல ரகமான கதைகள்-பல நூறு கதைகள்-எழுதியிருக்கிறேன். அவற்றில் பதிமூன்று தான் இத்தொகுதியில் அடக்கம். எனது கதைகளின் தன்மைகளை எடைபோட்டு முத்திரை குத்தி, முடிவு கட்ட இந்த ஒரு தொகுதி போதாதாது. 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்கிற சாப்பாட்டுராமத்தனத்தை எழுத்து முயற்சிகள் விஷயத்தில் கையாள்கிறவர்கள் சரியான முறையை அனுஷ்டிப்பவர்கள் ஆகார்.

இத் தொகுப்பில் உள்ள கதைகள் ஹனுமான், சரஸ்வதி, புதுமை, ஆனந்தவிகடன், கல்கி, எழுத்தாளன் சிறப்பு மலர் ஆகியவற்றில் வெளியானவை. அப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு என் நன்றி உரியது.

சென்னை

13 ஜூன், 1964 வல்லிக் கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=ஆண்_சிங்கம்&oldid=1519773" இலிருந்து மீள்விக்கப்பட்டது