இளையர் அறிவியல் களஞ்சியம்/உடலமைப்பு

விக்கிமூலம் இலிருந்து

உடலமைப்பு : நம் உடலாகட்டும் பிற உயிரினங்களின் உடலாகட்டும் பல கோடிக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு உருவானதாகும். இவை உயிரணுக்களால் ஆனவை. இவ்வுயிரணுக்கள் புரோட்டோப்பிளாசம் எனும் உயிர்ப்பொருளால் ஆனவையாகும். உயிரணுக்கள் பல சேர்ந்து திசுக்களாகின்றன. திசுக்கள் பல சேர்ந்து உறுப்புகளாகின்றன. உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்ததே உடலாகும். உடல் கண்ணுக்குப் புலனாகும் ஒன்று. உடல் இயக்கத்துக்குக் காரணமான உயிரும் உள்ளமும் கண்ணுக்குப் புலனாவதில்லை. உயிர் இருக்கும்வரை உடல் இயங்கும். உயிர் போயின் உடல் வெறும் ஜடமாகும்.

உடல் உறுப்புகள் பல மண்டலங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொரு மண்டலமும் லெவ்வேறு பணிகளை நிறைவேற்றி உடலை இயக்குகின்றன.

உடலானது பல்வேறு தனிமங்களின் கூட்டிணைவாகும். ஒவ்வொருவரின் உடலும் ஆக்சிஜன், இரும்பு, செம்பு, பாஸ்வரம், கால்சியம், கந்தகம் போன்ற தனிமங்களால் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கணித்திருக்கிறார்கள். ஆயினும் இத் தனிமங்களைக்கொண்டு ஒரு உயிரணுவையோ அவை கொண்ட உடலையோ உருவாக்கிவிட முடியாது.

மனித உடலை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிப்பர். முகம், தலை, கழுத்துக் கொண்ட பகுதி, நடு உடல் அல்லது முண்டம், கைகால்கள் ஆகியவையே அவை. உடலின் சில முக்கிய உறுப்புகள் இரண்டிரண்டாக அமைந்துள்ளன. இரு கண்கள், இரு காதுகள், இரண்டு பிரிவாக அமைந்த நுரையீரல், இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவைகளே அவைகள். அவற்றுள்

உடலமைப்பு

தலையே தலையாய பகுதியாக அமைந்துள்ளது. "எண் சாண் உடலுக்குத் தலையே முக்கியம்’ என்பது பழமொழியாகும். உடல் இயக்கத்துக்கு மூலாதாரமான மூளையும் புலனுறுப்புகளான கண், காது, மூக்கு, வாய் ஆகிய பகுதிகள் அனைத்தும் தலையிலேயே அமைந் துள்ளன.

கழுத்துக்குக் கீழாக இடுப்புக்கு மேலாக சீரணமண்டலம் அமைந்துள்ளது. இங்குகுதான் நாம் உண்ணும் உணவு சீரணிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது. இச்சக்தியே உடல் இயங்குவதற்கான ஆற்றலைத் தருகிறது. கை கால்கள் மட்டுமல்லாது உடல் முழுவதையும் காக்கும் கேடயமாக எலும்புகள் அமைந்துள்ளன. மனித எலும்புக் கூட்டை உடலின் சட்டகம் என்றே கூறிவிடலாம். இவை மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளைக் காப்பதோடு உடலுக்கான வடிவத்தையும் ஏற்படுத்த எலும்புகள் உதவுகின்றன.

எலும்புகள் உடலுக்கான வடிவத்தை வழங்க உதவுவது போன்று உடல் அழகான தோற்றத்தைப் பெற தசைகள் பேருதவி புரிகின்றன. எலும்பை இறுக்கமாகப் பற்றி அவற்றுக்குப் பாதுகாப்பையும் தருகிறது. தசைகள் சுருங்கி விரியும் தன்மையுடையனவாக இருப்பதால் நம் உடல் உறுப்புகளை விரும்பிய வண்ணம் அசைக்க இயலுகிறது. சில பகுதிகளில் உள்ள தசைகள் எலும்போடு சிறிதும்ஒட்டாமல் அமைந்துள்ளன. இதயம், இரைப்பை போன்ற உடல் உறுப்புகள் எலும்போடு இணையாமல் தனித்தே அமைந்துள்ளன. மூட்டுகள் மூலம் எலும்புகள் இயங்குகின்றன.

அடுத்து உடலின் முக்கியத்துவமுள்ள பகுதி நரம்பு மண்டலமாகும். உடல் உறுப்புகள் அனைத்தும் செவ்வனே இயங்க நரம்புகள் பெருந்துணைபுரிகின்றன. அவ்வாறே தோலும் உடலைப் பாதுகாக்கும் போர்வையாக அமைந்துள்ளன. வியர்வை போன்ற கழிவுகள் வெளியேற தோலே ஆதாரமாக அமைந்துள்ளது.