இளையர் அறிவியல் களஞ்சியம்/ஐன்ஸ்டீன், ஆல்பெர்ட்

விக்கிமூலம் இலிருந்து

ஐன்ஸ்டீன், ஆல்பெர்ட் : இயற்பியல் துறையின் வேகமான வளர்ச்சிக்குப் பெருந்துணையாயிருந்தவர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனே ஆவார். ஒப்பற்ற கணித மேதையாகத் திகழ்ந்த ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் உள்ள உல்ம் எனுமிடத்தில் பிறந்தவர். ஜெர்மனியில் உள்ள முனீக்கிலும் பின்னர் சுவிட்சர்லாந்திலும் உயர் கல்வி கற்று மாபெரும் விஞ்ஞான மேதையாக மலர்ந்தார்.

கணிதவியலைத் தவிர்த்து வேறு துறைப் பாடங்களில் அதிக ஆர்வம் காட்டாத ஐன்ஸ்டீன் கணிதவியல் அடிப்படையில் இயற்பியல் ஆய்வுகளில் பேரார்வம் காட்டினார். இவரது ஆய்வுக் கட்டுகரைகள் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தன. இவரது ஆய்வுத் திரட்சியாக சார்பியல் கொள்கை (Theory of relativity)யை வகுத்து உலகுக்கு வழங்கினார். 1919ஆம் ஆண்டில் வெளியிட்ட இக்கொள்கை இயற்பியல் துறை விஞ்ஞானிகளிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அறிவியல் உலகம் இவரது 'சார்புக் கொள்கை'யை ஏற்றிப் போற்றிப் பாராட்டியது.

ஒரு பொருளின் எடைக்கும் அப்பொருள் தரும் ஆற்றலுக்குமிடையிலான தொடர்பை விவரிப்பதே சார்புக் கொள்கையாகும். இக் கொள்கையை அடியொற்றியே அணுகுண்டு உருவாக்கப்பட்டது.

சாதாரணமாக இவரது சார்புக் கொள்கைகளை இருவகையினவாக விஞ்ஞானிகள் பிரித்துக் கூறுவர். ஒன்று சிறப்புச் சார்புக் கொள்கை (Special Theory of Relativity). இது 1905 வரையிலான ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று பொதுச் சார்புக் கொள்கை (General Theory of Relativity). இது 1915ஆம் ஆண்டில் வகுத்தமைக்கப்பட்டது. இந்த இரண்டாவது கொள்கையை ஐன்ஸ்டீனின் “ஈர்ப்பு விதி“ (Law of Gtavita. tion) என்று அழைப்பர்.

மேற்கூறிய ‘சார்புக் கொள்கை'களுக்காகப் போற்றப்பட்டாலும் இவர் வேறுசில கண்டுபிடிப்புகளையும் உலகுக்கு வழங்கியுள்ளார். அவற்றுள் குறிப்பிடக்தக்க ஒன்று 'ஒளியின் வளைவு’ (Photo Electric effect) என்பதாகும். இக்கண்டுபிடிப்புக்காகவே இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜெர்மனியில் உள்ள இயற்பியல் ஆய்வுக் கூடத்தலைவராக விளங்கிய இவர் இரண்டாம் உலகப்போரின்போது இட்லரின் கொடுமைக்குப் பயந்து அமெரிக்கா சென்றார். அங்கேயே

ஆல்பெர்ட் ஐன்ஸ்டின்

வாழ்ந்து மறைந்தார். இறுதிவரை ஆய்வுகள் செய்து கொண்டே இருந்தார்.

இன்றைய விண்வெளி விந்தைகள் பலவும் நிகழ வழியமைத்த பெருமை இவரையே சாரும். அறிவியல் மேதையாதத் திகழ்ந்த ஐன்ஸ்டீன் கலையுணர்வு மிக்கவராகவும் அமைதிப் பிரியராகவும் வாழ்ந்தார். அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகள் மீது பேரார்வம் காட்டிய பெரியாராவார்.

ஒலி : ஒருபொருள் அதிரும்போது ஒலி அலைகளாகக் காற்றில் பரவிச் செல்கிறது. அது நம் காதை எட்டும்போது ஒலி கேட்கிறது. இவ்வொலி பரவும் அலைகள் ஒலி அலைகள் எனப்படும். அமைதியாக இருக்கும் நீரின் மேல் ஒரு சிறு கல்லைப்போட்டால் நீர் அதிர்ந்து வட்ட வட்ட அலைகளாகக் கரையை மோதுவதைப் பார்த்திருக்கலாம். இதே முறையில்தான் அதிர்வு ஒலியும் காற்றில் அலைகளாகப் பரவி கேட்கும் புலனை அடைகிறது.

காற்றில் ஒலி அலைகள் பரவிச் செல்வது போலவே நீரிலும் ஒலி அலைகள் பரவிச் செல்லும். காற்றைவிட நீரில் ஒலி அலைகள் விரைந்து பரவிச் செல்லும்.காற்றில் வினாடிக்கு 330 மீட்டர் செல்லும் ஒலி, நீரில் 1450 மீட்டர் செல்லும். கண்ணாடி, எஃகு போன்ற திடப் பொருள்களின் வழியே செல்லும் ஒலி வேகம் இன்னும் அதிகமாகும்.

அதிர்வுக்கேற்ப ஒலி அமையும். வினாடிக்கு 20-க்கும் குறைவாக அதிர்வு அமைந்தால் அந்த ஒலியை நாம் கேட்கவே முடியாது. அதேபோன்று20,000-க்கு மேற்பட்ட அதிர்வுகளையும் நம்மால் கேட்க முடியாது.

ஒளி அலைகள் பரவ ஊடகப் பகுதி தேவை. சாதாரணமாகக் காற்று, வாயு, திரவம், திடப் பொருள்களில் ஒலி பரவும். வெற்றிடத்தில் ஒலி பரவாது.

ஒலி அலைகளை மின்சக்தியாக மாற்றலாம். இம் மின்சக்தியைக் கம்பி வழியே வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லவும் மீண்டும் அதனை ஒலி அலைகளாக மாற்றவும் இயலும். இம்முறையில்தான் தொலைபேசியில் பேச இயலுகிறது. வானொலிப் பெட்டி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதும் ஒலித்தட்டு மற்றும் ஒளி நாடாவில் ஒலியைப் பதிவு செய்து பயன்படுத்துவதும் இம்முறையில்தான்.