இளையர் அறிவியல் களஞ்சியம்/கியூரி தம்பதியர்

விக்கிமூலம் இலிருந்து

கியூரி தம்பதியர் : அறிவியல் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்களான பியர் கியூரியும் மேரி கியூரியும் தம்பதியர் ஆவர். இவர்கள் இருவரும் அரிய கண்டுபிடிப்புக்கான நோபல் பரிசை இணைந்து பெற்றனர். தன் கணவர் பியர் கியூரியின் மறைவுக்குப்பின், மேரி கியூரி தன் கண்டுபிடிப்புக்காக மேலும் ஒரு முறை நோபல் பரிசு பெற்றார்.

பியர் கியூரி ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர். இளமை தொட்டே கணிதத்தில் பேரார்வம் கொண்டிருந்த இவர் அறிவியல் ஆராய்ச்சியில் முனைப்பும் காட்டினார். இயற்பியல் பள்ளித் தலைவராக இவர் பணியாற்றியபோது போலந்து நாட்டவரான மேரி இவரது மாணவியானார். இவரும் அறிவியல் ஆராய்ச்சியில் பெரும் நாட்டமுடையவராயிருந்தார். சோதனைச் சாலையில் பியர் கியூரிக்கு மேரி உதவியாளராகப் பணியாற்றினார். மனமொத்த இருவரும் திருமணம் செய்து கொண்டு தம்பதியர் ஆயினர். இவர்கள் இருவரும் மேற்கொண்ட கதிரியக்க ஆராய்ச்சி இவர்கள் இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

ஒரு விபத்தில் பியர் கியூரி இறந்தார். தன் துணைவரை இழந்த மேரி கியூரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். ரேடியத்தையும் கதிர் இயக்கத்தையும் பற்றிய பல புதிய கண்டுபிடிப்புச் செய்திகளை உலகுக்கு வழங்கினார். இதற்காக இவருக்கு 1911ஆம் ஆண்டு மீண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சோதனைக்கூடத்தில் கியூரி தம்பதியர்

நீண்ட காலம் கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததால் சோகை நோய்க்கு ஆளாகி இறக்க நேர்ந்தது. இவரது புதல்வி ஜூலியட் கியூரியும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆவார்.