எதிர்பாராத முத்தம்/பாடல் 27

விக்கிமூலம் இலிருந்து


27

அவையிடைச் சிவை


அரங்கிடை அரசன் ஓர்பால், அறிஞர்கள் ஓர்பால், கேட்கத்

தெரிந்தவர், கலையில் வல்லோர் செந்தமிழ் அன்பர் ஓர்பால்

இருந்தனர்! அரி யணை மேல் இருந்தனன் குரு பரன் தான் !

வரும் சனம் தமிழருந்த வட்டிக்க ஆரம் பித்தான்!

அப்போது கூட்டத் தின்கண் அர்ச்சகன் பெற்ற பெண்ணாள்,

சிப்பத்தைப் பிரித் தெடுத்த சீனத்துப் பொம்மை போன்றாள்,

ஒப்பியே ஓடி வந்தாள் காற்சிலம் பொலிக்க ! மன்னன்

கைப்பற்றி மடியில் வைத்தான் கவிதையில் அவாவை வைத்தாள்.