கலைக்களஞ்சியம்/அக்காந்தேசீ

விக்கிமூலம் இலிருந்து

அக்காந்தேசீ (Acanthaceae) ஆடாதோடைக்‌ குடும்பம்‌. இந்தக்‌ குடும்பத்டைச்‌ சேர்ந்தவை பெரும்‌பாலும் சிறு செடிகளும்‌,குற்றுச்செடிகளுமே.சில கொடிகளும்‌,அருமையாகச் சிலமரங்களும்‌ உண்டு. இலைகள்‌

ஆடாதோடை

எதிரொழுங்கும்‌, முழு வடிவுமுள்ளவை. இலையடி்ச் செதிலில்லை. பூங்கொத்து பெரும்‌பாலும்‌ வவரா நுனிக்‌ கதிர். பூக்காம்பிலைகளும்‌, பூக்காம்‌புச்‌சிற்றிலைகளும்‌ பலவற்றில்‌ பெரியவையாயும்‌ நிறமுள்ளவையாயும்‌ இருக்கும்‌. இச்‌சிற்றிலைகள்‌ சில சமயம்‌ பூவை மூடிக்கொண்டிருக்கும்‌. அப்‌போது இவை புல்லி வட்டம்‌ போல்‌ பூவைக்‌ காக்க உதவும்‌. பூ பெரும்பாலும்‌ இருபால்‌ உள்ளது; வட்டத்துக்கு 4-5 உறுப்புக்கள்‌ உடையது; ஒருதளச்சமமானது. அல்லி இணைந்தது. கேசரம்‌ 4 அல்லது 2; பல இனங்களில்‌ 1-3 போலிக்‌ கேசரங்கள்‌ (Staminodes) உண்டு. மகரந்தப்பை அறைகள்‌ சமம்‌ அல்லது ஒன்று சிறிதும்‌ ஒன்று பெரிதுமாகவும்‌, ஒன்று மேலும்‌ ஒன்று கீழுமாகவும்‌ இருக்கலாம்‌. மகரந்தத் தூள்‌ பலவிதச்‌ சித்திர அமைப்புள்ளது. பொதுவாக இந்தத்‌ தூளின்‌ தோற்‌றம்‌ ஒரு சாதிக்குள்‌ ஒரேமாதிரியாக இருப்பதால்‌ சாதிகளைப்‌ பிரித்தறிய இது அடையாளமாகிறது. சூலகத்‌தின்‌ அடியில்‌ நன்றாக வளர்ந்த ஆதான மண்டலம்‌ (Disc) உண்டு. அதில்‌ பூந்தேன்‌ சுரக்கும்‌. சூலகம்‌ இரண்டு சூலிலைகள்‌ கூடியது; இரண்டறைகளுள்ளது. அச்சுச்‌ சூலொட்டுமுறை. சூல்கனள் பல-2, கனி அறைவெடி கனி. விதைகள்‌ பெரும்பாலும்‌ கடினம்‌; சப்பையானவை. கனி வெடிக்கும்போது ஒலியுண்டாகலாம்‌.

பூவின்‌ அமைப்பு பூச்சிகள் வருவதற்கு ஏற்றதாக இருக்கிறது. தேனீக்கள்‌ வருகின்றன. சேசரம்‌ சற்று முன்னாடி முதிர்கின்றது. சூல்முடி கேசரத்துக்கு அப்‌பால்‌ வெளியே நீட்டிக்‌ கொண்டிருப்பதால்‌ பூச்சி நுழையும்போதே அதன்‌ உடல்‌ அதிற்‌ படுகிறது. அதனால்‌ அயல்‌ மகரந்தச்‌ சேர்க்கை உண்டாகிறது.

இந்தக் குடும்பத்தில் பல செடிகளில் விதைத்தாளிலிருந்து கொக்கிபோல் வளைந்த பாகம் ஒன்று வளரும். இது விறைப்பாக இருக்கும். கனி வெடிக்கும்போது இது வில்போல நிமிர்ந்து விதையைத் தூரத்தில் எறியும்.

அக்காந்தொசெபலா
அக்காந்தொசெபலஸ் ரானீ. (ஆண்) [படம் இயற்கை அளவிற்கு பெரியது. பாக் என்பவர் எழுதியதைத் தழுவியது]
1. உறிஞ்சி
2. உறிஞ்சியுறை
3. லெம்னிஸ்கஸ் சுரபி
4. நரம்பணுத்திரள்
5. 6, உறிஞ்சியை உள் இழுக்கும் தசைகள்
7. விந்தணுச் சுரப்பிகள்
9. பைபோன்ற கலவியுறுப்பு வெளியே பிதுங்கி யிருக்கும்

இது மிகப்பெரிய குடும்பம், இந்தியாவில் பல சாதாரணச் செடிகள் இதைச் சேர்ந்தவை. இவற்றுள் சில கொடிகள்; சில தரையில் படிந்து கிடப்பவை; சில பாலை செடிகள்; சில கடற்கரைச் சதுப்புச் செடிகள்.

இந்த குடும்பத்தில் சில நன்கறிந்த செடிகள். தன் பெர்ஜியா (Thunbergia) என்னும் அழகான பெரிய பூக்கள் உள்ள பெருங்கொடி, டபாஸ்காய் (Ruellia), முள்ளி, படிகம், கனகாம்பரம் முதலிய பலவகைச் செடிகள் (Barleria), காட்டுக் கிராம்பு (Justicia suffruticosa), கருநொச்சி (Justicia gendarussa), ஆடாதோடை முதலிய பல உண்டு. நீலமணிபோன்ற பூக்களுடள்ள கழிமுள்ளி (Acanthus ilicifolius) நெய்தல் நிலத்துக் கழிகளிலும் சதுப்பு நிலங்களிலும் காடுபோல் வளர்ந்திருக்கும். இதன் இலை முட்கள் உள்ளது. நீர்முள்ளி (Hygrophila) குளக்கரைகளிலும்,வயல்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். இவை எல்லாவற்றிலும் வினோதமானது நம் நாட்டு மலைகளில் வளரும் குறிஞ்சி (strobilanthus) என்னும் காட்டுப்புதர். இது 10-12 ஆண்டுகளுக்குப் பூவாமலே வளர்ந்து ஓராண்டில் எல்லாச் செடிகளும் ஒன்றாகப் பூவிடும். அக்காந்தேசீ குடும்பத்தில் பல மூலிகைகள் உண்டு. அவற்றில் ஆடோதோடை மிகச் சிறந்தது. பார்க்க: ஆடாதோடை, நீர்முள்ளி, கனகாம்பரம், குறிஞ்சி, கருநொச்சி.