கலைக்களஞ்சியம்/அனந்தராமையர், இ. வை.

விக்கிமூலம் இலிருந்து

அனந்தராமையர், இ. வை. (1872-1931) தஞ்சை மாவட்டம் இடையரற்று மங்கலம் ஊரினர். தந்தையார் வைத்தீச்சுர
ஐயர், தாயார் தையலம்மாள். சிறந்த தமிழ்ப்புலவர். வடமொழி கற்றவர். நினைவாற்றல் மிக்கவர். செய்யுள் இயற்றுவார். கும்பகோணம் நகர உயர்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் பென்னாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைபள்ளி, கும்பகோணம் கல்லூரி, சென்னை மாகாணக் கல்லூரி ஆகியவற்றில் தமிழா ஆசிரியராக இருந்தவர். கலித்தொகையைத் தாம் ஆராய்ந்த குறிப்புக்களுடன் ஒரு பதிப்பும், களவழி நாற்பது ஒரு பதிப்பும் இவர் வெளியிட்டிருக்கிறார். களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் பொய்கை யாழ்வாரும் ஒருவரல்லர் என்பது இவர் கருத்து. மறைவு : 26-12-1931.