கலைக்களஞ்சியம்/அரிதாசர்

விக்கிமூலம் இலிருந்து

அரிதாசர் வைணவப்புலவர் ; இருசமய விளக்கம் என்னும் தத்துவ நூலின் ஆசிரியர். இந்நூல் 2119 செய்யுட்களையுடையது; சைவ வைணவச் சமயக் கருத்துக்களை உரைப்பது; மதுரையினின்றும் வெளியாகி கொண்டிருந்த அரிசமய திவாகரம் என்ற பத்திரிகையில் அதன் ஆசிரியராகிய பண்டித அரங்கராமாநுஜர் இந்நூலை உரைநடையாக்கி வெளியிட்டார். அரிதாசர் நாகலாபுரத்திலே கிருஷ்ணதேவராயர் காலத்திலே 16ஆம் நூற். முற்பகுதியில் வாழ்ந்தவர்.