கலைக்களஞ்சியம்/அருளாளப் பெருமான்

விக்கிமூலம் இலிருந்து

அருளாளப் பெருமான் திருமால் அடியவர். ஞானசாரம், பிரமேயசாரம் என்னும் நூல்களை இயற்றியவர். இப்பெரியார் உடையவருடைய கட்டளைப்படி திருமாலைத் திருவாராதனஞ் செய்ய உரிமை பெற்றவர். 14ஆம் நூற்றாண்டு.