கலைக்களஞ்சியம்/அறநெறிச்சாரம்‌

விக்கிமூலம் இலிருந்து

அறநெறிச்சாரம்‌ ஒரு நீதி நால்‌. பதின்மூன்‌றாம்‌ நூற்றாண்டின்‌ தொடக்கத்தில்‌ ஏற்பட்டிருக்கலாம்‌. இதன்‌ ஆரியர்‌ முனைப்பாடியார்‌. இவர்‌ சமணர்‌. தீபங்குடியில்‌ விளங்ய அருங்கலான்வயத்தாரால்‌ இயற்றப்பட்ட அருங்கலச்‌ செப்பு என்னும்‌ அறநூலின்‌ அமைப்பைப்‌ பின்பற்றிக்‌ காட்டி, ஒழுக்கம்‌, ஞானம்‌ என்னும்‌ மூன்று பெரும்பகுதிகளையும்‌ 992 வெண்பாக்‌களையும்‌ கொண்டுள்ளது இந்நூல்‌. இந்நூலில்‌ அருகனைச்‌ சிவன்‌ என்று கூறியிருக்கிறார்‌. அறங்களைக்‌ கூறும்‌ முமை அழகியது.