கலைக்களஞ்சியம்/அறிவுடை நம்பி

விக்கிமூலம் இலிருந்து

அறிவுடை நம்பி சங்க காலத்தவன். இவனைப் பாண்டியன் அறிவுடை நம்பி எனவும் கூறுவர். மக்கட்பேற்றின் பெருமையைப் பற்றிப் பாடியுளன் (புறம் 188). பிசிராந்தையரால் (புறம் 184) பாடப்பெற்றவன். இப்பாண்டியன் நெய்தலையும் குறிஞ்சியையும் பாடியுள்ளான். இவன் பாடல்கள் நான்கு: (நற்:15; குறுந் : 230; புறம் : 188;அகம்: 28).