உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அறையணி நல்லூர்

விக்கிமூலம் இலிருந்து

அறையணி நல்லூர் தென்னார்க்காடு ஜில்லா, திருக்கோவலூர் புகைவண்டி நிலையத்துக்கு மிகவும் அருகில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள சிவத்தலம். இப்போது அரகண்ட நல்லூர் என மருவி வழங்குகிறது. கோயில் ஒரு சிறு குன்றின்மேல் இருக்கிறது. இங்கே பஞ்சபாண்டவர் குகை என்னும் ஐந்து அறைகளும், திரௌபதியிருந்ததென்னும் சிறிய அறையொன்றும் இருக்கின்றன. பிரசண்ட ரிஷி பூசித்த இடம். சுவாமி பெயர் அறையணிநாதேசுரர். அம்மன் அருள் நாயகி. தீர்த்தம் பெண்ணையாறு. பாறைமீது பெரிய கோபுரத்துடன் இக் கோவில் மிக அழகாகத் தோன்றுகிறது. இது திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது.