கலைக்களஞ்சியம்/அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்

விக்கிமூலம் இலிருந்து

அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் (சு. 12ஆம் நூ.) வடக்குத் திருவீதிப் பிள்ளையினுடைய புதல்வர் ; பிள்ளைலோகாசாரியர்க்குத் தம்பியார் ; திருவரங்கத்தில் அவதரித்தவர்; பிரமசரிய நிலையிலிருந்தே துறவறம் பூண்டவர்; திருப்பாவை, திருவந்தாதி, கண்ணிநுண் சிறுத்தாம்பு இவற்றிற்கு வியாக்கியானம் செய்தவர்; ஆசார்ய ஹிருதயம் என்ற நூலை (த. க.) இயற்றி, அதனைத் திருவரங்கத்தில் இறைவன்முன் அரங்கேற்றினார். பு. ரா. பு.