கலைக்களஞ்சியம்/ஆக்கூர்

விக்கிமூலம் இலிருந்து

ஆக்கூர்: தஞ்சாவூர் ஜில்லாவில் மாயவரத்திலிருந்து கிழக்கே 10 மைலில் உள்ளது. கோயில் மாடக்கோயில். அதற்குத் தான்றோன்றி மாடம் என்று பெயர். சிறப்புலி நாயனார் ஊர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் இவ்வூருக்கு உண்டு. சுவாமி தான்தோன்றியப்பர். அம்மை வாள்நெடுங்கண்ணியம்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆக்கூர்&oldid=1456128" இலிருந்து மீள்விக்கப்பட்டது