கலைக்களஞ்சியம்/ஆத்தூர்

விக்கிமூலம் இலிருந்து

ஆத்தூர் சேலத்துக்குக் கிழக்கே 32வது மைலில் சேலம், விருத்தாசலம் இருப்புப்பாதையில் உள்ளது. ஆதியில் இது ஆனந்தகிரி என்று வழங்கிவந்தது. ஊரின் நடுவில் ஆறு ஓடுவதால் ஆற்றூர் என்று பெயர் பெற்றது. பின்னர் ஆத்தூர் என மருவியது. ஆற்றுக்கு வடக்கே முதலியார் ஒருவர் கட்டிய கோட்டையிருக்கிறது. சேலம் மாவட்டத்திலேயே நன்செய்ச் சாகுபடிக்குப் பேர்போன ஊர். மக் : 22,844 (1951).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆத்தூர்&oldid=1456685" இலிருந்து மீள்விக்கப்பட்டது