கலைக்களஞ்சியம்/ஆனந்தக்கூத்தர்

விக்கிமூலம் இலிருந்து

ஆனந்தக்கூத்தர் (16ஆம் நூ.) பாண்டிநாட்டில் பொருநை யாற்றங் கரையிலுள்ள வீரவநல்லூரினர். திருக்காளத்திப் புராணம் இயற்றியவர். திருவாசகத்துக்கு உரையெழுதிய ஆனந்தக்கூத்தர் இவரோ என்பது தெரியவில்லை. இவரைப் பரிமளப் புலவரென்றும் உரைப்பர்.