கலைக்களஞ்சியம்/ஆனாய நாயனார்

விக்கிமூலம் இலிருந்து

ஆனாய நாயனார் பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். திருச்சிராப்பள்ளியை அடுத்த மழநாட்டில் மங்கலவூரிலிருந்த இடையர். பசு மேய்க்கும்போது திருவைந்தெழுத்தைப் புல்லாங் குழலில் இன்னிசையுடன் வாசித்துத் தாமும் பிற உயிர்களும் சிவ உணர்ச்சியை அடைந்து நிற்பது வழக்கம். இவ்வாறிருந்து முத்தி பெற்றார்.