கலைக்களஞ்சியம்/ஆன்டியாக்

விக்கிமூலம் இலிருந்து

ஆன்டியாக் கி. மு. 300-ல் செலியூக்கஸ் நிகேட்டார் தன்தந்தை ஆன்டியாக்கஸ் பெயரால் சிரியாவில் நிருமாணித்த பழைய தலைநகரம். செல்வத்திற் சிறந்து விளங்கிய இந்நகர் கீழை நாடுகளின் அரசி என்னும் பெயரோடு திகழ்ந்தது. அக்காலத்தில் ஐரோப்பாவில் ரோமும், ஆப்பிரிக்காவில் அலெக்சாந்திரியாவும், ஆசியாவில் இந்நகரமும் மிகுந்த பெருமையோடு விளங்கின. கி. பி. 526-ல் ஒரு பூகம்பம் இந்நகரின் பெரும் பகுதியை அழித்துவிட்டது. சிலுவைப் போர்களில் இந் நகரம் சிறிது சிதைவுற்றது. 1268-ல் எகிப்தியர்கள் இந்நகரை முழுவதும் அழித்துவிட்டனர். இப்போது அப் பழைய இடத்தில் புதிய நகரம் ஒன்று இருக்கிறது. பட்டுக் கைத்தொழில் ஓரளவு நடைபெறுகிறது.