கலைக்களஞ்சியம்/ஆமூர்மல்லன்

விக்கிமூலம் இலிருந்து

ஆமூர்மல்லன் மற்போர் வல்லவன். உறையூர்ச்சோழன் தித்தன் மகனான போர்வைக் கோப்பெருநற்கிள்ளியாற் போர்புரிந்து கொல்லப்பட்டவன். பொழுது மகாபலிபுரம் என வழங்கும் மாமல்லபுரம் ஆமூர் நாட்டில் இருந்ததென்று டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் குறிப்பிடுகின்றனர் (புறம்.80).