உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆலங்கீர் II

விக்கிமூலம் இலிருந்து

ஆலங்கீர் II (1699-1759): 1748-1754 வரை டெல்லியில் சுல்தானாயிருந்த அகமத்ஷாவை II-ம் காசியுதீன் என்பவன் கொன்றபின் ஜகந்தர்ஷாவின் மகன் II - ம் ஆலங்கீர் என்னும் பட்டத்தோடு அரசனானான். ஒளரங்கசீப்பிற்கு I-ம் ஆலங்கீர் என்பது பட்டப்பெயராகையால், இவன் II - ம் ஆலங்கீர் ஆனான். இவன் தனது 57ஆம் வயதில் மொகாலாய சக்கரவர்த்தியானான். இவன் ஔரங்கசீப்பைப் பலவகையிலும் பின்பற்றினான். கல்வியிலும் ஆசார வழிகளிலும் மிகுந்த பற்றுடையவனாயிருந்தான்.இசை முதலிய அழகுக்கலைகளில் இவன் உள்ளம் ஈடுபடவில்லை. அரசியல் வாழ்க்கையில் இவனுக்குச் சிறிதும் செல்வாக்கின்றி யிருந்தது. இவனுக்கு மந்திரியாயிருந்த காசியுதீன் இவன் அகமத்ஷா அப்தலியோடு நட்புக் கொண்டிருந்ததை விரும்பாமல் இவனைக் கொன்றான் இவனுக்குப் பின் மொகலாய மன்னனாகப் பட்டத்திற்கு வந்தவன் II ம் ஷா ஆலம் என்பவன். தே. வெ. ம.