கலைக்களஞ்சியம்/ஆலங்கானம்

விக்கிமூலம் இலிருந்து

ஆலங்கானம்: 1. பெருங்கதையில் விபுலகிரியின் பக்கத்தில் மிருகாவதியின் தந்தை சேடகன் தவஞ் செய்துவந்த இடம்.

2. மற்றோர் ஆலங்கானம் விந்தியமலையின் பக்கத்தில் நருமதை யாற்றங்கரையிலுள்ளது.

3. தலையாலங்கானம் என்னும் ஊர். இது தலையாலங்காடு என்றும் வழங்கப்படுகிறது. ஒரு சிவத்தலம்; தமிழ் நாட்டில் உள்ளது.