உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இந்தியத் தேசிய ஆராய்ச்சி நிலையங்கள்

விக்கிமூலம் இலிருந்து

இந்தியத் தேசிய ஆராய்ச்சி நிலையங்கள்: இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன் இந்தியாவில் பல்கலைக் கழகங்கள் மட்டும் விஞ்ஞான ஆராய்ச்சி ஓரளவு செய்து வந்தன. யுத்த முயற்சிக்கான பல பொருள்கள் பிற நாடுகளிலிருந்து வருவது தடைப்பட்டதால் நாட்டிலேயே ஆராயும் தேவை உண்டாயிற்று. அதன்மேல் இந்திய அரசாங்கம் 1940-ல் விஞ்ஞான, கைத்தொழில் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவியது. இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றபின் பல ஆராய்ச்சி நிலையங்கள் நாட்டின் வெவ்வேறு பாகங்களில் கீழே குறித்துள்ளவாறு நிறுவப்பட்டுள்ளன:

1. தேசியப் பௌதிக சோதனைச்சாலை, புதுடெல்லி. 2. தேசிய ரசாயனச் சோதனைச்சாலை, பூனா. 3.உலோகத் தொழிற் சோதனைச்சாலை, ஜாம்ஷெட்பூர். 4. எரிபொருள் ஆராய்ச்சி நிலையம், ஜியோல்கோரா. 5. மத்திய உணவுத் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிலையம், மைசூர். 6. மத்திய மருந்துச் சரக்கு ஆராய்ச்சி நிலையம், இலட்சுமணபுரி. 7. மத்தியக் கண்ணாடி பீங்கான் ஆராய்ச்சி நிலையம், கல்கத்தா. 8. மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம், டெல்லி.9.மத்தியக் கட்டட ஆராய்ச்சி நிலையம், ரூர்க்கி. 10. மத்தியத் தோல் ஆராய்ச்சி நிலையம், சென்னை. 11. மத்திய மின்சார-ரசாயன ஆராய்ச்சி நிலையம், காரைக்குடி. 12. ரேடியோ மின்சாரப் பகுப்பியல் ஆராய்ச்சி நிலையம், பிலானி.

அணுகுண்டுச் சக்தியைக் கைத்தொழில்களுக்குப் பயன்படுத்துவதற்கு உற்பத்தி செய்வதை ஆராயும் பொருட்டு அணுகுண்டுச் சக்திக் கமிஷனை அரசாங்கம் ஏற்படுத்தி யிருக்கிறது. இப்போது வகுத்துள்ள ஐந்தாண்டுத் திட்டத்தில் குடிசைக் கைத் தொழில்களை ஆராய்வதற்கான பொறியியல் ஆராய்ச்சி நிலையம், மத்திய உப்பு ஆராய்ச்சித்தலம் என்னும் இரண்டு ஆராய்ச்சி நிலையங்கள் சேர்ந்துள்ளன.