கலைக்களஞ்சியம்/இந்திய விஞ்ஞானக் கழகம்

விக்கிமூலம் இலிருந்து

இந்திய விஞ்ஞானக் கழகம் (Indian Academy of Sciences) 1934-ல் பெங்களூரில் சர் சீ. வீ. இராமன் முயற்சியால் நிறுவப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சிக்கு ஆவன செய்வதே இதன் நோக்கம். இதில் 208 உறுப்பினர்கள் உளர். உலகம் போற்றும் பெரிய விஞ்ஞானிகளுள் ஐம்பதின்மர் சிறப்பு உறுப்பினராக இருக்கிறார்கள். திங்கள்தோறும் விஞ்ஞானக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படுகின்றன. கழகத்தின் தலைவரும் வெளியீடுகளின் பதிப்பாசிரியரும் சர் சீ . வீ. இராமன் ஆவர். இங்கு அடிக்கடி விஞ்ஞானக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இக் கழகம் ஆண்டுதோறும் டிசம்பரில் இந்திய நகரங்களில் மாநாடு கூட்டுகிறது; பெங்களூரில் இராமன் ஆராய்ச்சி நிலையம் என்பதை நடத்துகிறது. இது உலகத்திலுள்ள சிறந்த விஞ்ஞான நிலையங்கள் நூற்றைம்பதுடன் தொடர்புடையது.