கலைக்களஞ்சியம்/இந்திய விஞ்ஞான ஊழியர் சங்கம்

விக்கிமூலம் இலிருந்து

இந்திய விஞ்ஞான ஊழியர் சங்கம் (Association of Scientific Workers of India) விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுடைய நிலையை உயர்த்தவும், விஞ்ஞான அறிவை மக்களிடைப் பரப்பவும், 1947-ல் ஜவஹர்லால் நேரு அவர்களின் தலைமையில் நிறுவப்பெற்றது. விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும், பொறிவலாளர்களும், மருத்துவப் பட்டதாரிகளும், சமூக விஞ்ஞானப் பட்டதாரிகளும் உறுப்பினராகலாம். ஏறக்குறைய 1500 உறுப்பினர்கள் (1952) உளர். இதற்குப் பன்னிரண்டு கிளைகள் உள்ளன. தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இருந்து

வருகிறது. இது 1949 முதல் 'விஞ்ஞான கர்மீ' என்ற பெயரால் ஓர் ஆங்கிலத் திங்கள் இதழை வெளியீட்டு வருகிறது.