குறட்செல்வம்/மொழியும் உறவும்

விக்கிமூலம் இலிருந்து

மொழியும் உறவும்

தமிழகத்தின் வரலாறு எவ்வளவுக்கெவ்வளவு பெரு மைப்படத் தக்கதாக அமைந்திருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு வருத்தப்படுவதற்குரிய செய்திகளும் உள.

தமிழர்கள் கடல் நாடு என்று கருதப் பெறுதற்குரிய . இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயருக்கு முன்னோடி யாகவே கடலில் கலம் செலுத்தியவர்கள். கடல் கடந்த நாடுகளோடு வாணிகம் செய்தவர்கள்.

சிறப்பாக இந்திய கிழக்காசிய நாடுகளைத் தன்ன கத்தே கொண்ட பெருந்தமிழ்நாடு உடையவர்கள். இமயத்தின் மடியிலும், கங்கைக் கரையிலும், சிந்துநதி யின் ஒரத்திலும் தமிழர்கள் உலாவினர் - வாழ்ந்தனர் என்று வரலாறு பேசுகின்றது.

எனினும் இன்றையத் தமிழர்கள் நிலை என்ன? அந்தப் பழைய தமிழகம் எங்கு போயிற்று? தமிழர்கள் தங்களுடைய உறவு கலந்து வாழும் பண்பை வளர்த்துக் கொள்ளாமையின் காரணமாகவே, இவற்றையெல்லாம் இழந்தனர் - இழந்து கொண்டிருக்கின்றனர் - இனியும் இழப்பர்போல் தோன்றுகிறது. :

வேறுபட்ட பல்வேறு மனித இனத்தினரிடையேயும் அன்பைப் பெருக்கி உறவை வளர்ப்பது மொழியினாலாய விழுமிய பயன். மொழியின் இந்த விழுமிய நோக்கத் தைக் ளெலப் போக்கில் தமிழர்கள் மறந்தார்கள்.

நாம் வேறொருவரோடு உறவுகொண்டு வாழ விரும்பி னால், அவரைப் புரிந்துகொள்ள வேண்டியதவசியம். புரிந்துகொண்டு பேசிப் பழகி வாழ்வதற்கு நம்மைத் தகுதிபடுத்திக்சகாள்ள வேண்டும். .

இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் சிங்களவர்களைப் புரிந்து கொண்டு பழக, இவர்கள் சிங்களத்தைப் படித்துக் கொள்ளவுமில்லை. அவர்கள் இவர்களைப் புரிந்துகொள்ள -பழக_அவர்கட்கு தமிழை கற்றுக் கொடுக்கவுமில்லை. இந்த நிலைமையில் மொழி அல்லது இனத்தினாலாய ஒற்றுமைகள் வளர்ந்து காலப் போக்கில் பகைமையாக மாறி உறவைக் கெடுத்து விட்டது. - -

நாம் எந்த நாட்டில் வாழுகிறோமோ, அத்த நாட்டை நம்முடைய நாடாக ஆக்கிகொள்ள முயல வேண்டும். அச்சாதனையை நாம் அடைவதற்காக அதற். குரிய வகையில் நமது கல்வியை அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்களும், ஆரியர்களும் எந்தெந்த நாடு கட்குச் சென்று வாணிகம் செய்தார்களோ அந்தந்த நாடு களின் மொழிகளைப் படித்துக்கொள்வதில் அக்கறை காட்டினார்கள். .

அதுபோலவே, ஆங்காங்குள்ள மக்கட்குத் தங்கள் மொழியை கற்றுக் கொடுப்பதிலும் அக்கறை காட்டி னார்கள். அதன் காரணமாகவே ஆங்கிலம் உலக மொழியாயிற்று. சமஸ்கிருதம் இந்திய மொழியாயிற்று. தமிழர்கள் தம் முயற்சியைச் செய்யாமையின் காரண மாக - தமிழ் மொழி தமிழ்நாட்டு மொழியாகக்கூடப் பூரணமாக இடம் பெறவில்லை. ஆதலால் தமிழர்கள் உலக அரங்கோடு - உலக மனித சமுதாயத்தோடு உறவு கொண்டு புகழ் பெற்று வாழ வேண்டுமானால், பல மொழிகளையும் பயில வேண்டும். -

பலமொழி வழிப்பட்ட மக்கட்கும் பைந்தமிழைக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அன்றே உலகம் நம்வழி நடக்கும். இதனை வள்ளுவர்,

யாதான்ும் காடாமல் ஊராமால் என்ஒருவன் சாக்துணையும் கல்லாத வாறு,

என்று கூறியிருக்கிறார்.