தந்தையும் மகளும்/183

விக்கிமூலம் இலிருந்து


183அப்பா! ஒட்டகைச் சிவிங்கி அதிக உயரமாக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அது ஒட்டகையைவிட உயரமாகவே இருக்கிறது. அது இருபது அடி உயரம் கூட வளரும். அதன் உயரத்துக்குக் காரணம் அதன் கால்களும் கழுத்தும் நீண்டிருப்பதுதான். அதன் முன்கால்கள் பத்து அடி இருக்கும். கழுத்து நீண்டிருந்தாலும் எளிதில் வளைவதில்லை. அதனல் அது கால்களே அகற்றி வைத்துக் கொண்டுதான் தரையிலுள்ள தண்ணிரைக் குடிக்க முடியும்.

அது சாக பட்சணி மாமிசம் தின்னது. அது ஆப்பிரிக்காவில் காணப்படும் பிரதேசங்களில் புல்லுங் கிடையாது. மரங்களின் அடிப்பாகத்தில் கிளைகள் உண்டாவதுமில்லை. ஆதலால் அது மரங்களின் உயர்ந்த கிளைகளிலுள்ள இலைகளேயே தின்று ஜீவிக்க வேண்டியதாயிருக்கிறது. அதனால் தான் அதற்கு நீண்ட கால்களும் கழுத்தும் அமைந்திருக்கின்றன. அதன் நாக்கு ஒன்றரை அடி நீளம் இருப்பதும் இலைகளே எட்டிப் பிடிப்பதற்காகவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/183&oldid=1538641" இலிருந்து மீள்விக்கப்பட்டது